Friday, 24 July 2020

நேற்று நணபர் ஒருவர் செருப்பு பற்றி
 ஒரு பதிவுவெளியிட்டிருந்தார் அதைப் படித்ததும் எனக்கு 40 வருடத்திற்கு முன் என் நினைவுகள் மனதில் ஒடியதுதமிழ்நாட்டிலிருந்து 1980 ஐந்து ஆசிரியர்களை டெல்லிக்கு தேரதெடுத்து cultural resources training அனுப்பினார்கள் அதில் நானும்ஒருத்தி ஒருமாத ட்ரெய்னிங் அது ,நான் அங்கு கரோல் பாகில் என் தூரத்து உறவினர் வீட்டில் paying guestதங்கினேன். அப்போது ஒரு நாள் அஜ்மல் கான் ரோடு ஒரு கடையில் மிக அழகான செருப்பு ஒன்றைப் பார்த்து வாங்கினேன். அடுத்த நாள் பல கற்பனைகளுடன் அதை போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று நினைத்திருந்தேன் மறுநாள் காலை இந்த செருப்பு கேற்ற புடவை கட்டிக்கொண்டு கிளம்பினேன். அன்று திங்கட்கிழமை பஸ் ஸ்டாண்டில் ஒரே கூட்டம் நான் போகவேண்டிய மண்டி ஹவுஸ் பஸ் வந்தது ஆண் பெண் வித்யாசம் பாராமல் அனைவரும் அடித்துக்கொண்டு ஏறினோம் அப்போது என் செருப்பை ஒருவர் மிதித்துக்கொண்டு ஏற விடாமல் தடுத்தார் நான் சப்பல் சப்பல் என்று கத்தினேன் அவர் அதை காது கொடுத்து கேட்கவில்லை என் செருப்பை மிதித்துக்கொண்டு படியில் ஏறினார் நான் படியில் ஏற என் செருப்பு பஸ்ஸில் இருந்து கீழே விழுந்தது பஸ்ஸும் கிளம்பி விட்டது ஒரு காலில் மட்டும் செருப்பு இருந்தது இறங்கி எடுக்கலாம் என்றாலோபஸ் திரும்பி விட்டது. எனக்கு அழகிய செருப்பு கீழே விழுந்து ஒரு பங்கு அதை மிக ஆசைப்பட்டு வாங்கி வகுப்பில் அனைவரிடம் காட்டவேண்டும் என்று நினைத்தேன் அதிலும் மண் விழுந்தது நினைத்து அழுகை வந்தது ஓரளவு அடக்கிக்கொண்டு என்னுடைய ஸ்டாப் வந்ததும் காலில் இருந்த ஒருசெருப்பை எடுத்து ஆசை தீர பார்த்தேன் அதை என் கர்சீப் பில் எடுத்து சுருட்டிவைத்துக்கொண்டேன். வகுப்பிற்கு சென்று அதை desk அடியில் வைத்தேன், டெல்லி சென்றபோது ஜனவரி மாதம் பயங்கரகுளிர். என் காலில் செருப்பில்லாமல் நடப்பதைப் பார்த்து அனைவரும் ஏன் செருப்பில்லாமல் நடக்கிறாய் என்று கேட்க ஒவ்வொருவருக்கும் என் கதை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது மிகவும் அவமானமாக இருந்தது எப்பொழுது மாலை வரும் வீட்டிற்குச் செல்வோம் என்று நினைத்தேன், மாலை வந்தது அந்தஒற்றைசெருப்பை பத்திரமாக பேப்பரில் சுற்றி எடுத்துக்கொண்டேன், ம்றுநாள் அந்த ஒற்றை செருப்பை எடுத்துக்கொண்டுபோனேன்அடுத்த நாள் பஸ்ஸில் அவ்வளவு கூட்டம் இல்லை உட்காரஇடம் கிடைத்தது. பஸ் புறப்பட்டது உடனே நேற்று எந்த இடத்தில் என் செருப்பு விழுந்ததோ அந்த இடத்தில் என் கையிலிருந்த ஒற்றை செருப்பை வீசி எறிந்தேன்.. பக்கத்திலிருந்த என் சினேகிதி ஏன் செருப்பை தூக்கி போட்டாய்என்று கேட்டாள். நேற்று யாரும் ஒருு செருப்பை எடுத்து இருக்க மாட்டார்கள் இன்று அதன் ஜதையை போட்டால் யாருக்காவது உபயோகமாக இருக்கும் என்று கூறினேன் இதைக்கேட்டு அவள் அதுவும் சரிதான் என்று கூறி சிரித்தாள், இன்றுவரை அதுபோனறசெருப்பு கிடைக்கவில்லை என்பது என் வருத்தத்துக்கு உரியது இதை பதிவு செய்வதால் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்

Monday, 1 June 2020

letter

அன்புள்ள பட்டு ( பெயர் மாற்றப்பட்டுள்ளது)
எப்படிடா கண்ணுஇருக்கே? எனக்கு உன்னை பற்றி தான் சதா நினைவு. நீயும் மாப்பிள்ளையும் வீட்டிலிருந்தே வேலை செய்வது அறிந்து சந்தோஷம்!
உனக்கு எப்படி பாட்டி பொழுது போகிறது என்று  நீ கேட்பது 
தெரிகிறது.
எனக்கு என்ன? இரண்டு மாதங்களுக்கு முன் மத்தமர் குரூப்பில் சேர்ந்தது முதல் நேரம் போதவில்லை. நண்பர்கள் எழுதும்பதிவுகளை படிக்கவும் அதற்கு
கமெண்ட்/லைக் எழுதவும் சரியாக இருக்கிறது ஒவ்வொருவருடைய பதிவைப் படிக்கும் போதும் மனதிற்கு உற்சாகம் ஏற்படுகிறது. அதுவும் லாக்டோன் நேரத்தில் மத்திய மர்குரூபஇல்லை என்றால் ரொம்பவே போரடிக்கும். அது சரி உங்களுக்கு வேலை எப்படி இருக்கிறது? உனக்கு டான்ஸ் கிளாஸ் ஆன்லைனில் நடக்கிறதா?
அம்மா அப்பா உன் தங்கை அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள்
உங்களைப் பொறுத்தவரை உங்களுக்கு பல அனுபவங்களை கொரோன சொல்லி கொடுத்திருக்கும்.
கணவன் மனைவியிடையே ஒரு நெருக்கமான அன்னியோன்னியத்தை உண்டாகியிருக்கும் இருவரும் சிரித்துப் பேசி கொண்டு (சில சமயம் சின்ன கோபதாபங்கள்) வேலை செய்வது தனிமையில் பிறருடைய இடையூறு இல்லாமல் இரு வீட்டு குடும்ப விஷயங்கள் உங்களுடைய  சிறு வயது ஞாபகங்களை பேசி மகிழ்வது போன்றவை வாழ்வி ல்ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்ன .நான் சொல்வது சரிதானே.? 
தினமும் எக்சசைஸ் செய் றீங்களா? சைக்கிளிங் வாக்கிங் போனாஇனிஜிம்முக்கு போக வேண்டிய அவசியமில்லை, உடம்பு நல்லா இருக்கும் பணமும் மிச்சம் என்ன சொல்வது சரிதானே

பாட்டி ரொம்ப அட்வைஸ் பண்றேஎன்று நீசொல்வது.  என் காதுல விழுது இருந்தாலும் லெட்டர்ல தான் இதையெல்லாம் கூறமுடியும்
பணமோ சாமான்களோஅவசரத்திறகு
 சேமித்து வைக்கும் பழக்கத்தை இதுசொல்லி கொடுத்திருக்கும், நேரம் அதிகம் இருக்கறதுனால நீங்கள் எல்லோருடனும் பேசி உறவே பலபடுத்துகிறீர்கள் .இதுவரை நினைத்தால் ஹோட்டல் /take away என்று இருந்த நீங்கள் வீட்டிலேயே விதவிதமாக செய்து அசத்துகிறீர்கள் இதெல்லாம் போன்ல சொன்ன போ பாட்டி ரொம்ப ரொம்ப மொக்கை போடுற எனகூறி என்னை பேசவிடாமல் தடுப்பே இது ஒரு நல்ல சந்தர்ப்பம் இதை அமைத்துக் கொடுத்த மதியமர்குரூப்பிற்கு thank s சொல்லணும் சரி சரி எனக்கு நேரம் ஆயிடுச்சு . இதோட லேட்டரை முடிச்சுக்கிறேன். ஏன்னா மத்தியமரில் மற்றவர்கள் எழுதியுள்ளதை பார்க்கரணும். இதுக்கு பதில் எழுது
சொல்ல மறந்துட்டேனே இந்த மாதம் 5.6.2020 வெள்ளிக்கிழமை பெரியவர் ஜெயந்தி அன்று நீ பூஜை செய். மற்றவை
அடுத்த கடிதத்தில்
                               இப்படிக்கு
                                 உன்அன்புள்ள
                                 சியாளா பாட்டி

Wednesday, 27 May 2020

ஜன்னல் ஓரம்--------காசி பயணக்கட்டுரை

நம் பாரத புண்ணிய பூமியில் ஆன்மீகத்திற்கும் தவத்திற்கும் புகழ் பெற்றது இப்பூமியில் பல ஆறுகளும் நதிகளும் கடல்களும் இருந்தாலும் கங்கையை புனித நதியாக நாம் போற்றுகிறோம் விசேஷங்களுக்கு மங்கள நீராட்டலுக்கு கங்காஸநானம்
என்றுதான் கூறுவார்

மானிடப் பிறவி எடுத்த நாம் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் காசிக்குச் சென்று புனித நீராடி ஸ்ரீ விஸ்வநாதனை தரிசிக்கவேண்டும் பண்டைக்காலத்தில் காசிக்குச் செல்வது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று ஆனால் இப்பொழுது காலையில் கிளம்பி மாலையில் திரும்ப விமானம் உள்ளது அவ்வளவு எளிதாய் பயணம்!
எனக்கு சிறு வயது முதலே காசிக்கு போக வேண்டும் என்ற அவா ஆனால் பல சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆல் போக முடியவில்லை 8.11…2004 அன்று எங்கள் நண்பர்களுடன் காசிக்குப் போவது என்று முடிவாயிற்று என் கனவு பயணத்திற்கு ஆயத்தம் செய்தேன். என் கணவரோ காசிக்குப் போவது பற்றி அதாவது தம்பட்டம் அடிக்காத குறையாக அனைவரிடமும் கூறி மகிழ்ந்தார் காசிக்குப் போகும் முன்ராமேஸ்வரம் சென்று சேதுக்கரை மண்ணை எடுத்து வந்தோம்


8….11.2004 அன்று மாலை 5…30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வாரணாசி எக்ஸ்பிரஸில் கிளம்பத் தயாரானோம் என் எண்ணம் போல ஜன்னல் ஓரம் இருக்கையில் ரிசர்வ்செய்தேன். 35 மணி நேரம் பயணம் ஜன்னலோர இருக்கை என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இதில் பயணம் செய்பவர்கள் எல்லோரும் ஆன்மீக பக்தர்கள் எனவே ஒரே பஜனையும் ஸ்லோக்முமாக ஒரே குஷிதா!!! பயணகளைப்பே இல்லைவிடியற்காலை அலகாபாத் வந்தடைந்தோம் அங்குள்ள சிவ மடத்தில் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு சில சடங்குகளை செய்தோம் அதாவது ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து வந்த மண்ணில் மூன்றில் ஒரு பகுதியை பிரயாகை யிலும்ஒரு பாகத்தை காசியில் கங்கையிலும் மூன்றாவது பாகத்தை கயையில் பல்குனி ஆற்றிலும் கரைக்க வேண்டும் கங்கை நீரை எடுத்துச்சென்று
 ராமேஸ்வரத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் இதுவே காசி யாத்திரை செல்லும் விதிமுறை!
ஒரு பகுதி மண்ணை எடுத்துக்கொண்டு பிரயாகை சென்றோம் அலகாபாத் என்பதற்கு கடவுளின் நகரம் என்று பெயர் இப்பெயரை அக்பர் சூட்டினார் தீர்த்தங்களின்  ராஜாவாக பிரயாகை வர்ணிக்கப்படுகிறது இங்கு ரிஷிகளும் முனிவர்களும் ரர்யாகங்கள் செய்தாக கூறப்படுகிறது 
திரிவேணி சங்கமம் என்பது கங்கை யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் பச்சை பசேலென்று யமுனையும் நுரை ததும்பும் கங்கையும் உணர முடியாத வகையில் பூமிக்குள் சரஸ்வதியும் ஒன்று சேரும் இடம் திரிவேணி சங்கமம். அந்த இடத்திற்கு படகு சவாரி அதன் சுகமே தனிதான்!!
ஆஸ்திரேலிய பறவைகள் படகை ஓட்டி வருவதை கண்டு ரசித்தோம் அவைகளுக்கு பொரி போட்டு எங்களோடு வருவதை ரசித்தோம் இது எங்களை திக்குமுக்காட வைத்தது இங்கு பண்டாக்கள் நம்மை சூழ்ந்து கொண்டு நம் பொறுமையை சோதிப்பது தவிர்க்க முடியாத ஒன்று இது பொறுமையும் நிதானமும் அவசியம் என்பதை உணர்த்துகிறது இங்கு கணவர் மனைவியின் கூந்தலை பின்னி நுனியில் பூவைத்து அந்த முடியை கத்தரித்து யமுனை நதியில் போடுவார்கள் அந்த முடிமேலே மிதக்காமல்90டிகிரி யில் நதியின் அடிபாகம் நோக்கி செல்லும் பிரமிப்பூட்டும் அதிசயம்!!!! வேறு எங்கும் காணமுடியாது இதற்கு வே ணிதானம் என்று பெயர்.

இங்குதான் கங்கை தன் புனித யாத்திரையை தொடங்குகிறாள் எனவே தாமிர சொம்பில் கங்கையை எடுத்துவந்து நம் பூஜை அறையில் வைத்து 
 பூஜிக்க வேண்டும் என்று ஐதீகம்
மூதாதையர்களுக்கு சி ரார்த்தம்செய்தோம். இங்கு நேருவின் ஆனந்த பவனம் இல்லம் உள்ளது அதைச் சென்று பார்த்து ரசித்தோம் பிறகு காசியை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது எப்போதும் போல் நான் ஜன்னலருகே உட்கார்ந்துகண்டு அனைத்து இயற்கை காட்சிகளையும் ரசித்தேன் வழியில் வரு. அசி என்ற இரு நதிகளையும் கடந்தோம் இந்த இரு நதிகளையும் இனண.த்து வாரணாசி என்று பெயர

நீண்ட நாள் ஆசையான காசியை வந்தடைந்தோம். அன்று மாலை தன திரயோதசி யை முன்னிட்டு அன்னபூரணியைபார்க்க சென்றோம்
அன்று தங்க அன்னபூரணி இடம் ரூபாய் காசு வாங்கினாள் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. எனவே அன்னபூரணியை தரிசித்தோம்
11.11 2004 அன்று தீபாவளி விடியற்காலை மூன்று மணிக்கு கங்கைக்குச் சென்று விளக்கேற்றி நீரில் விட்டோம் உண்மையான கங்கா ஸ்நானம் செய்தோம் புதிய ஆடைகளை அணிந்தோம் அனைவரும் இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடினோம்.


அன்று தங்க அன்னபூரணி யையும் லட்டு தேரையும் பலவித பட்டணங்களையும் கண்டு ரசித்தோம் தங்க அன்னபூரணி தீபாவளி மட்டுமே காட்சி தருவாள் மற்ற நேரங்களில ரிசர்வ் வங்கியில் வைத்துவிடுவார்கள் அன்னபூரணியை பார்க்க நாங்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தோம். மாலையில் காலபைரவர் கோவிலுக்கு சென்றோம் சாரநாத் புத்தர் ஆலயம் மிகவும் அழகாக இருந்தது இதை சீனர்கள் பராமரித்து வருகிறார்கள் வியாச காசிக்குச் சென்று காசி ராஜாவின் ஆபரணங்களையும் உபயோகித்த பொருட்களையும் பார்த்து வியந்தோம் உலகப் புகழ்பெற்ற பனாரஸ் யூனிவர்சிட்டி சென்று பார்த்தோம் சோழி அம்மனை பார்த்தால்தான் காசி யாத்திரை முழுமையடையும் என்பது நம்பிக்கை அடுத்த இரண்டு நாட்களும் மூதாதையர்களுக்கு காரியங்கள் செய்ய அசிக்காட்அகல்யா காட் அஸ்வமேத காட் பஞ்சகங்கா காட் மணிகர்ணிகாட் சென்று செய்தோம் காசி பழைய காலம் போல குறுகிய தெருக்களும் சைக்கிள் ரிக்ஷாக்கள் காணப்பட்டது சுமங்கலி பூஜை கங்கா பூஜை செய்துவிட்டு கயா செல்ல ஆயத்தமானோம் முகல்சராய் ஸ்டேஷனிலிருந்து ஜோத்பூர் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸில் கயா வந்தடைந்தோம் அங்கு பல்குனி நதியில் நீராடி மூதாதையர்களுக்கு 64 பிண்டங்கள் வைத்து எங்கள் நன்றிக்கடனை செய்தோம் இங்கு தாயாருக்கு செய்யும் நன்றி கடன் மிகவும் போற்றுதற்குரியது அங்கிருந்து அக்ஷய வடம் சென்று 64 பிண்டங்கள் வைத்து நண்பர்கள் மூதாதையர்கள் நாம் வளர்த்த பிராணிகள் அனைவருக்கும் நன்றி கடன் செலுத்தினோம் அங்கிருந்து ஹவுரா வந்து முக்கியமான காளி கோவில் மற்றும் முக்கிய இடங்களை பார்த்து மகிழ்ந்தோம்

17.11.2004 ஹவுராவிலிருந்து சென்னை செல்லும் ரயிலில் ஏறினோம் எப்போதும் போல் ஜன்னல் அருகே உட்கார்ந்து அனைத்து மக்களுக்கும்Bye
சொல்லி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டேன். காசி பயணம் எவ்வித தடங்கலும் இல்லாமல மகிழ்ச்சியாக முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னோம் சென்னை சென்ட்ரல் ரயில்  நிலையத்தில் எங்கள் பேரக்குழந்தைகளும் பிள்ளையும் வந்து வரவேற்றார்கள் எங்கள் வாழ்நாள் முழுக்கவும் இந்த காசி பயணத்தை மறக்க முடியாது என்பது திண்ணம்!!!!!!!!!!!!!!!!

Tuesday, 26 May 2020

சோதனைகளைசாதனைகளாகமாற்றியநிகழ்ச்சி

மீனாவும் அவர் கணவரும் இங்கிலாந்தில்இருந்துசென்னைவர ஒருவாரமேஇருந்தது

அனறு காலை மீனாசமையல் அறையில்ஏதோவேலைசெய்து ஏதோகொண்டு இருந்தாள்.தீடீரென
கண்ணில் ஏதோ விழுந்த மாதிரி இருந்தது உடனே சுருக் சுருக் என்று வலி உடனே கணவரிடம் சென்று கண்ணில் ஏதோ விழுந்துவிட்டது பாருங்கள் என்றாள் அவரது பார்த்துவிட்டு ஒன்றும் இல்லையே என்றார். ஆனால் வலி அதிகமாக ஆரம்பித்தது. உடனே அந்த வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த ஆங்கிலேய பெண்மணியிடம் கண்ணில் ஏதாவது தூசி விழுந்தாஎன்று பார்க்கச் சொன்னார் அவளும் ஒன்றுமில்லை என்றார் ஆனால்வலி.
நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாயிற்று பொறுக்கமடியாமல்
அழ ஆரம்பித்து விட்டாள் உடனே மருமகளுக்கு போன் செய்தார் அவள் உடனே வீட்டிற்கு வந்தாள
மீனா அழுவதைப் பார்த்து கணவருக்கு போன் பண்ணினாள்.
உடனே emergency ward அழைத்துக்கொண்டு வரச்சொன்னார் தானும் அங்கு வருவதாக கூறினார். அங்குள்ள கண் மருத்துவர் அனைத்து பரிசோதனைகளும் செய்து மருந்து இன்ஜெக்ஷன் அனைத்தும் கொடுத்தார் ஆனால் வலி நிற்கவில்லை தூக்கத்திற்கு மருந்து கொடுத்து அனுப்பினார் மறுநாள் கல்ச்சர் டெஸ்ட் செய்ய ஏற்பாடு செய்தார் வலி ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது அதற்குள் சென்னைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது வலி நிற்க மாத்திரைகள் கொடுத்தார்கள்

எப்படியோ சென்னை வந்து விட்டாள்
 திரும்பவும் வலி ஆரம்பித்தது, எப்பொழுதும் பார்க்கும் குடும்ப கண் டாக்டரிடம் சென்றாள் அவரும் 
வலி நிற்க மிகவும் பாடுபட்டார் நாளுக்கு நாள் வலி அதிகமாக 
 ஆயிற்று. அவர் வேறு ஒரு சிறந்த கண் நிபுணரிடம் அழைத்துச் சென்றார் அவர்பார்த்து பரிசோதித்து இது மிகவும்சிக்கலான லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடியது Bvllovs. Keratopathy என்ற நோய் இது பரம்பரையில் யாருக்காவது இருந்திருக்கும் என்றார் இதற்கு கண் மாற்று சிகிச்சை தான் ஒரே வழி என்றார். மீனாவின் குடும்பத்தார் மிகவும் ஆடிப் போய்விட்டார்கள். கண் கிடைக்கவேண்டும் பிறகு அதுமீனாவிற் பொருந்த வேண்டும் இன்ஸ்பெக்சன் ஆகக்கடாது
 என டாக்டர் அடுக்கிக்கொண்டே போனார். மூன்று மாதம் ஏசி ரூமில் யாரும் வராமல் இருக்க வேண்டும் அப்படிப்பட்ட இடத்தில் இருட்டில் தான் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டார்

மீனாவின் அதிர்ஷ்டம் விரைவிலேயே இறந்தவருடையகண் கிடைத்தது. ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது மூன்று மாதம் அவள் கணவர் அவரை மிக ஜாக்கிரதையாக வீட்டிற்கு யாரும் வராமல் கிட்டதட்ட இப்பொழுது உள்ளது போல் தனிமைப்படுத்தப்பட்டாள்.

தனிமையில் உள்ள பொழுது அவளுக்குள் ஒரு வைராக்கியம் எழுந்தது.. உடல்நிலை சரியானதும் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்யவேண்டுமெனறு

ஆறு மாதம் கழித்து அவளுடைய சினேகிதிகள் அனைவரும் அவளை பார்க்க வந்தார்கள் அப்போது அவள் நாம் ஏன் ஒரு லேடீஸ் கிளப் நடத்தக்கூடாது என்று கேட்டார் இங்கு நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்க ஒரு வாய்ப்பாக இருக்குமே என்றாள் உடனே அனைவரும் ஒப்புக் கொண்டு பத்து பேர் அடங்கிய ஒரருலேடிஸ் கிளப்பைதொடங்கினார்கள்.
அது ஒரு பொழுதுபோக்கு கிளப் ஆக இல்லாமல் நாம் இருக்கும் இடத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்துடன் பேசி ஏற்படுத்த வேண்டுமென்ற.. 
 முடிவு செய்தார்கள் ரோடு போடுதல் பார்க் அமைத்தல் போக்குவரத்துக்கு மினி பஸ் ஏற்பாடு செய்தல் போன்றவைகளை அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்தார்கள். 10 பேர் கிளம்பு 50 பேர் கொண்டகிளப் ஆகமாறியது.வ்ருடாவருடம்ஏழைகுழந்நைகளுக்குதேவையானவசதிகளைசெயகிறது
இந்த கிளப்ன்னிரண்டாவதுஆண்டைசிறப்பாக கொண்டாடியது சிறப்பாக ஒற்றுமையுடன் அமைதியாக .செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் கிளப்WIA இணைந்து பல நற்காரியங்களை செய்து வருகிறார்கள் இதற்கெல்லாம் காரணம் மீனாவின் சோதனைசாதனையாக மாறியது என்றே கூறலாம் ஆக பெண்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கிளப ஒரு சான்றாகும்,

தவறவிட்ட தருணம்

7 ,12 ,1996 சனிக்கிழமை காலை எழுந்திருக்கும் போதே நச நசவென்ற மழை கார்த்திகை மாசத்து மேகக்கூட்டம்நெய்வேலியில்!
எனக்கும் மனது முழுக்க ஒரே கவலை என்னவென்று தெரியாத ஒரு படபடப்பு..¡ என் கணவர் என்னை பார்த்து ஏன் ஒரே கவலையாக இருக்கிறாய்? என்று கேட்டார் என்னவென்றே தெரியவில்லை மனது ஒரே குழப்பமாக உள்ளது என்றேன், சாப்பிட்டுவிட்டு நன்றாக தூங்கு சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு விருதாச்சலத்தில்உள்ள ஆபிசுக்கு சென்றுவிட்டார்.

பத்து மணிக்கு BSNL landline phone ஒலித்தது அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது, போனை எடுத்தேன் மறுபக்கத்தில் இருந்து அத்தை பாட்டி நம்மை விட்டு 6 மணிக்குபோய்விட்டார்கள் என்று அழுதபடி என் மருமாள்கூறினாள்.
எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. பிறகு ஏன் இவ்வளவு லேட் ஆக கூறுகிறீர்கள் என்றேன் இன்று ஜெயலலிதாவை அரெஸ்ட் பண்ணியதால் கனெக்சன் கிடைக்கவில்லை இப்போதுதான் கிடைத்தது என்றாள்.
எப்போது மற்ற சடங்குகள் நடைபெறும் என்றேன். இங்குஒரே கலாட்டாவாக இருப்பதால் மாலை 5 மணிக்குள் எடுக்கப் போகிறார்கள் என்றாள். சரி என்று கூறி போனை வைத்தேன் என் கணவருக்கு விஷயத்தைக் கூறி போன் செய்தேன். அவரும் உடனே வந்துவிட்டார் சென்னைக்கு கிளம்ப பஸ் ஸ்டாண்ட் வந்தோம் அங்கு பஸ்கள போவது
 முடியாத காரியம் அப்படியே போனாலும் வழியில் எங்காவது கலாட்டா வால் நிற்க நேரும் என்று கூறினார்கள் அதுவுமின்றி ஐந்து மணிக்குள் போகாது என்றும் கூறினார்கள் சரி டேக்ஸி யில்போகலாமஎன்றால் ஒரு டாக்ஸி கூட ஸ்டாண்டில் இல்லை. உடனே வீட்டிற்கு வந்து நான் வர முடியாத காரணத்தை கூறிமேற்கொண்டு ஆக வேண்டியது செய்யச் சொன்னேன்

வீட்டிற்கு வந்ததும் நான் ஓவென்று அழுதேன். என் கணவர் நீ உன் கடமையை சரியாக செய்திருக்கிறாய் என்று கூறி சமாதானம் செய்ய முயன்றார், நான் என் அம்மாவை 33 வருடங்கள் வைத்து பராமரித்து வந்தேன். முதல் வருடம் தான் என் அண்ணாவிடம் அனுப்பி வைத்தேன்.
நான்கு நாட்களுக்கு முன்பு தான் என்அண்ணாபோன் செய்து அம்மாவுக்கு உடம்பு சரியில்லை நீ வந்து பார் என்று கூறினார் நான் சென்று பார்த்து ஒரு நாள் முழுவதும் இருந்து விட்டு லீவுஇல்லாததால் திரும்ப வந்தேன் வந்து இரண்டு நாட்களுக்குள் அம்மா இறந்தது மற்றும் கடைசி நேரத்தில் அம்மாவிற்கு செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை செய்ய முடியவில்லை, அப்போது நான்இரண்டு நாட்கள் லீவு போட்டு விட்டு இருக்காமல்
வந்ததுநான் செய்த மகாபெரியதவறு என் மனசாட்சிகூறுகிறது.நான்
தவறவிட்ட அந்ததருணம்என்மனதில்வடுவாக
பதிந்துவிட்டது.

Tuesday, 5 May 2020

கொறானாகொறானாஎன்று கேட்டுக்கொண்டே இருக்க அதனால கொஞ்சம் மாத்தி யோசிச்சேன் அதனால வந்த வந்தது தான் இது!1967 ஆண்டு எங்களுக்கு திருமணம் ஆயிற்று .எங்கள் இருவருக்கும் ஹனிமூ,ன் போக ஆசை! எனவே என் கணவர் அவர் அப்பாவிடம் நாங்கள் சென்னைக்கு ஹனிமூன் போகலாம் என்று இருக்கிறோம் என்று கூறினார்.என் மாமனார் என்னிடம் வந்து அம்மா… கல்யாண செலவு அதிகமாக ஆனதால் இப்போ நீங்க எங்கேயும் போக வேண்டாம் .நீ சொல்லுமா அவனிடம் என்று கூறினார். எனக்கோ மிக வருத்தம் சொல்ல முடியவில்லை. எங்கள் ஹனி மூன் ஆசை நிறுத்தப்பட்டது.இரண்டு நாள் கழித்து என் மச்சினன் குழந்தைக்கு அதாவது அவருடைய குழந்தைக்கு தலை முழுக்க கட்டி வருகிறது முடி இறக்க வேண்டும் திருப்பதிபோகவேண்டும் என்று கூறினார் உடனே என் மாமனார் நான் போய் குழந்தைக்கு முடிஇறக்கிக் கொண்டு வருகிறேன்.எனறுகூற என் மாமியார் நான் திருப்பதியை பார்த்ததில்லை நானும் வரேன் என்றார். கல்யாணம் ஆனதும் தம்பதியைதிருப்பதி கூட்டிண்டுவரேன்எனறு வேண்டிணடுஇருக்கேன் எனவே இவா ரெண்டு பேரும் வரட்டும் என்று கூறினாள்.பயண ஏற்பாடுகள் ஆரம்பமாயிற்றுஎன் மாமியார் வெளியில் சாப்பிட மாட்டார்கள் மடி சமையல் வேண்டும் எனவே பம்ப் ஸ்டவ்ஒருதகரடின்னில்! சமையல் சாமான்கள். வெங்கலப் பானை சாம்பார் வைக்க என பாத்திரங்கள் ஒரு சாக்குப்பையில் மூட்டை கட்டிட்டினார்கள்.திருவாரூரிலிருந்து திருப்பதி பாஸஞ்சரில் அவர்கள் மூவரும் குழந்தையுடன் வர நானும் என் அம்மாவும் பண்ருட்டியில் டிரெயினில் ஏறினோம். எனக்கும் என் கணவருக்கும் ஒரே குஷி !என்அம்மாஒரு வாரத்திற்கு தேவையான முறுக்கு .சீடை ஸ்வீட் என்று ஒரு டின் நிறைய பட்சணங்கள் செய்து கொண்டு வந்தார் ஆக ஒரு லாரி சாமான எடுத்துடகொண்டுசென்றோம். அது தவிர ட்ரெயினில் சாப்பிட்ட ஒரு கேரியர் நிறைய புளிசாதம் தயிர் சாதம் இட்லி இவைகளை எடுத்துக் கொண்டு போனோம்!கீழ் திருப்பதியில் அவர்கள் மூவரையும் குழந்தையும் பஸ்சில் ஏற்றிவிட்டு நானும் என் கணவரும் மேல் திருப்பதிக்கு நடந்து சென்றோம். அழகான இயற்கை காட்சிகள் தனிமை எங்கள் இருவருக்கும் மிகவும் ஆனந்தமாக இருந்தது. ஒருவழியாக மேல் திருப்பதிக்கு சென்று பஸ் ஸ்டாண்டில் அழைத்துக்கொண்டு நாங்கள் தங்கும் இடத்திற்கு போனோம் இப்போது போல் கூட்டம் கிடையாது தனிவீடு வாங்கிக்கொண்டோம் ஏனென்றால் சமைச்சி சாப்பிட வேண்டுமே!என் மாமியார் சமையல் செய்ய ஆயத்தமானார். ஸ்டவ்வை எடுத்து பத்த வைக்க அதுஎரியவில்லை.அதில்அடைப்பு!அதைநீக்கஸ்டவ் பின் கொண்டுவர மறந்து விட்டார்கள். எங்களிருவரையும் கடைக்குச் சென்ற வாங்கி வரச் சொன்னார்கள். அப்போதெல்லாம் திருப்பதியில் தமிழ் பேசுபவர்களே கிடையாது சுத்ததெலுங்கு! எங்களுக்கு தெலுங்கு தெரியாது.பின் வாங்காமல்ஒரு கட்டு விறகை வாங்கிக்கொண்டு வந்தோம் கற்களை வைத்து அடுப்பு மூட்டி சமையல் ஆரம்பித்தது. பகல் 3 மணிக்கு ஒரு சாதமும் குழம்பும் கிடைத்தது.இப்படியே நான்கு நாட்கள் நாங்கள் இருவரும் கடைக்கு போவதும் வருவதுமாக சந்தோஷமாக கழித்தோம். தினமும் கூட்டம் இல்லாத நேரத்தில் சுவாமி தரிசனம்!ஐந்தாவது நாள் கீழ் திருப்பதி வந்தோம் தாயாரை பார்த்துவிட்டு ஸ்டேஷனுக்கு வந்தோம். இப்போது போல் ரிசர்வேஷன் எல்லாம் கிடையாத கிடைத்த கம்பார்ட்மெண்டில் ஏறிஇடம் பிடிக்க வேண்டும். ஒருவழியாக ரயிலில் ஏறி விட்டோம். அப்போதுதான் சங்கடம் ஆரம்பித்தது!என் மாமியார் டாய்லெட் போய் வர சென்றார் குழந்தையும் கூட சென்றது. ட்ரெயின் கிளம்பி விட்டது அப்போதுதான் பார்த்தோம் குழந்தையை காணவில்லை எங்கள் எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி! ராஜா ராஜா என்று கத்திகொண்டு இங்குமங்கும் ஓடினோம். அதற்குள் டிரெயின் நகர ஆரம்பித்தது...என் மாமியார் ஓ என்று அழ ஆரம்பித்து விட்டாள். பிளாட்பாரத்தில் எட்டிப்பார்த்தால் குழந்தை இல்லை ட்ரெயின்னில் எங்கள் இடத்திலும் குழந்தை இல்லை. ஒருவேளை தண்டவாளத்தில் விழுந்து விட்டதோ என்ற பதற்றம்!! அதற்குள் நான் அடுத்த பகுதிக்குச் சென்று பார்த்தேன் அங்கு ஒரு சண்டை போட்டுக் கொண்டிருந்தகும்பல் நடுவில் குழந்தை அழுது கொண்டு நின்றுகொண்டிருந்தான்.அப்பப்பா! நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!!!ஒரு வழியாக அடுத்த நாள் திருவாரூர்வந்தடைந்தோம்.எங்கள் ஹனி மூன் எப்படி? அதை மாற்றி யோசித்து சந்தோஷமாக ஒரு மலை வாசஸ்தலத்தில் கழித்தோம் என்ற சந்தோஷமும் பெரியவர்களை திருப்திப் படுத்திய சந்தோஷமும் சேர்ந்து எங்களுக்கு மன நிறைவை கொடுத்தது ஹனிமூன் என்ற வார்த்தையை கேட்டால் எங்கள் இருவருக்கும் அந்த நாள் ஞாபகம் வந்து மனநிறைவை கொடுக்கும். இப்பொழுது அதை நான் மட்டுமே தனியாக அனுபவிக்கிறேன்கொடுக்கும்படி

நேற்று மாலை என் பேததிபாட்டி !பாட்டி! என்று கூப்பிட்டுக் கொண்டு வேகமாக வந்தாள் .ஏன் ?என்ன அவசரம் ?என்று கேட்க… பாட்டி எனக்குபசிக்கிறது ….உடனே டிபன் வேணும் என்றாள்.
சரி சரி காத்தால பண்ணிணஇட்லி இருக்கு சாப்பிடு என்று கூறினேன்,
ஐயோ இட்லியா இந்த கொரானா ஊரடங்கில்தினமும் இட்லி தோசை சாப்பி ட்டு போர் (borr)என்று  கூறிக்கொண்டே மாடிக்கு சென்று விட்டாள். என் பிள்ளையும் முணுமுணுத்துக்கொண்டே சென்றுவிட்டான்

நான் உடனே சமையலறைக்குச் சென்று 2 வெங்காயம் 2 தக்காளி ஒரு குடை மிளகாய் எடுத்து பொடிப்பொடியாக நறுக்கினேன். அடுப்பில் வாணலியை போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் கடுகை போட்டு வெடிக்க வைத்தேன். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கினேன். அடுப்பை சிம்மில் வைத்தேன். ஒரு அங்குல நீளத்திற்கு இஞ்சியை எடுத்து தோல் சீவிஅத்துடன் 5 பல் பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழு தாக்கினேன். அதை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி னேன். தக்காளி குடைமிளகாய் இவற்றையும் அத்துடன் போட்டு வதக்கி னேன்.  ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் கரம் மசாலா பொடி உப்பூசேர்த்து நன்கு வதக்கி அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்தேன். மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை போட்டு அதில் எண்ணெய்ஊற்றினேன். எண்ணை சூடாவதற்கு ள் காலையில் பண்ணிய இட்லியைஒரு அங்குல சதுரத்திற்கு  கட் பண்ணினேன். அதை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தேன்...

கீழே இறக்கி வைத்திருந்த கறிகாய் மசாலாவுடன் பொரித்த இட்லியை போட்டு நன்றாக கலந்து வைத்தேன் அத்துடன் கொஞ்சம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி தூவினேன். இதோ கைமா இட்லி தயார் என் பேததியை கீழே இறங்கி வா டிபன் ரெடி !என்றேன் .உடனே என் பிள்ளையும் பேத்தியும் மருமகளும்வேகமாக வந்தார்கள் .என்ன டிபன் என்று கேட்டார்கள் .உடனே நான் ஆளுக்கு ஒரு தட்டில் கைமா இட்லி பரிமாறினேன். அதை பார்த்ததும் இருவருடைய முகமும் பிரசன்னம் ஆயிற்று . ஆஹா!!ச.ரவணபவன் கைமா இட்லி என்று கூறினார்கள் .சாப்பிட்டதும் பாராட்டுகள் அப்பப்பா .மறக்க முடியாத ஒன்று!

கொரானாஊரடங்கு சமயத்தில் பொருளை அதாவது சாப்பாட்டு பொருளை வீணாக்காமல் எப்படி உபயோகப்படுத்துவது என்பதை அவர்களுக்கு இதன்மூலம் உணர்த்தினேன்.
முன்பெல்லாம் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு சமையலில்!!கும்பகோணம் டிகிரி காபி. திருநெல்வேலி அல்வா என்பதுபோல தஞ்சாவூர் கடும் பிட்லை ஒன்று இது மிகவும் பிரசித்தி அதை என் மாமியார் கற்றுக்கொடுத்தார்கள். ஏதாவது விருந்து என்றால் நான் தஞ்சாவூர் கடும் பெட்ல செய்வேன் இது அனைவராலும் புகழப்படும் ,அதை செய்யும் விதத்தை இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்
அதற்கு தேவையான காய்கள்
வாழைக்காய் ஒன்று
கத்தரிக்காய் 4
கேரட் 2
சேனைக்கிழங்கு ஒரு பெரிய துண்டு
உருளைக்கிழங்கு ஒன்று பெரியது
தேங்காய் ஒன்று

தேவையான பொருட்கள்
மிளகாய் 3
துவரம் பருப்பு ஒரு கப்
உளுத்தம் பருப்பு இரண்டு ஸ்பூன்
கடலைப்பருப்பு 2
சீரகம் அரை ஸ்பூன்
மிளகு அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
உப்ப தேவைக்கு ஏற்ப

செய்யும் முறை
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும், காய்களை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு நன்றாக கொதித்ததும் காய்களை போடவும். அதில் உப்பு மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும், துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் உளுத்தம் பருப்பு. மிளகாயை வறுக்கவும் அதனுடன் துருவிய தேங்காயையும் வறுக்கவும் அத்துடன் மிளகு சீரகம் இரண்டையும் போட்டு மிக்ஸியில் கரகர ப்பாகஅரைக்கவும். காய்கள் வெந்ததும் அதில் வெந்த துவரம் பருப்பு அரைத்து வைத்த விழுது கொட்டி கொதிக்க வைக்க வேண்டும் நன்றாக கொதித்ததும் எலுமிச்சம் பழ அளவு புளியை கரைத்து விடவும் ஒரு நெல்லிக்காய் அளவு வெல்லம் போடவும்.
இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கடுகு பெருங்காயம் கடலைப்பருப்பு கருவேப்பிலை தாளித்து கொட்டவும் நன்றாக கிளறி விட்டு இறக்கி வைக்கவும் இதுதான் தஞ்சாவூர் கடும் பிட்டத்தை. இதன் வாசனை ஊரையே தூக்கும். சுவையோ நாக்கை விட்டு அகலாது