Wednesday, 27 May 2020

ஜன்னல் ஓரம்--------காசி பயணக்கட்டுரை

நம் பாரத புண்ணிய பூமியில் ஆன்மீகத்திற்கும் தவத்திற்கும் புகழ் பெற்றது இப்பூமியில் பல ஆறுகளும் நதிகளும் கடல்களும் இருந்தாலும் கங்கையை புனித நதியாக நாம் போற்றுகிறோம் விசேஷங்களுக்கு மங்கள நீராட்டலுக்கு கங்காஸநானம்
என்றுதான் கூறுவார்

மானிடப் பிறவி எடுத்த நாம் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் காசிக்குச் சென்று புனித நீராடி ஸ்ரீ விஸ்வநாதனை தரிசிக்கவேண்டும் பண்டைக்காலத்தில் காசிக்குச் செல்வது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று ஆனால் இப்பொழுது காலையில் கிளம்பி மாலையில் திரும்ப விமானம் உள்ளது அவ்வளவு எளிதாய் பயணம்!
எனக்கு சிறு வயது முதலே காசிக்கு போக வேண்டும் என்ற அவா ஆனால் பல சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆல் போக முடியவில்லை 8.11…2004 அன்று எங்கள் நண்பர்களுடன் காசிக்குப் போவது என்று முடிவாயிற்று என் கனவு பயணத்திற்கு ஆயத்தம் செய்தேன். என் கணவரோ காசிக்குப் போவது பற்றி அதாவது தம்பட்டம் அடிக்காத குறையாக அனைவரிடமும் கூறி மகிழ்ந்தார் காசிக்குப் போகும் முன்ராமேஸ்வரம் சென்று சேதுக்கரை மண்ணை எடுத்து வந்தோம்


8….11.2004 அன்று மாலை 5…30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வாரணாசி எக்ஸ்பிரஸில் கிளம்பத் தயாரானோம் என் எண்ணம் போல ஜன்னல் ஓரம் இருக்கையில் ரிசர்வ்செய்தேன். 35 மணி நேரம் பயணம் ஜன்னலோர இருக்கை என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இதில் பயணம் செய்பவர்கள் எல்லோரும் ஆன்மீக பக்தர்கள் எனவே ஒரே பஜனையும் ஸ்லோக்முமாக ஒரே குஷிதா!!! பயணகளைப்பே இல்லைவிடியற்காலை அலகாபாத் வந்தடைந்தோம் அங்குள்ள சிவ மடத்தில் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு சில சடங்குகளை செய்தோம் அதாவது ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து வந்த மண்ணில் மூன்றில் ஒரு பகுதியை பிரயாகை யிலும்ஒரு பாகத்தை காசியில் கங்கையிலும் மூன்றாவது பாகத்தை கயையில் பல்குனி ஆற்றிலும் கரைக்க வேண்டும் கங்கை நீரை எடுத்துச்சென்று
 ராமேஸ்வரத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் இதுவே காசி யாத்திரை செல்லும் விதிமுறை!
ஒரு பகுதி மண்ணை எடுத்துக்கொண்டு பிரயாகை சென்றோம் அலகாபாத் என்பதற்கு கடவுளின் நகரம் என்று பெயர் இப்பெயரை அக்பர் சூட்டினார் தீர்த்தங்களின்  ராஜாவாக பிரயாகை வர்ணிக்கப்படுகிறது இங்கு ரிஷிகளும் முனிவர்களும் ரர்யாகங்கள் செய்தாக கூறப்படுகிறது 
திரிவேணி சங்கமம் என்பது கங்கை யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் பச்சை பசேலென்று யமுனையும் நுரை ததும்பும் கங்கையும் உணர முடியாத வகையில் பூமிக்குள் சரஸ்வதியும் ஒன்று சேரும் இடம் திரிவேணி சங்கமம். அந்த இடத்திற்கு படகு சவாரி அதன் சுகமே தனிதான்!!
ஆஸ்திரேலிய பறவைகள் படகை ஓட்டி வருவதை கண்டு ரசித்தோம் அவைகளுக்கு பொரி போட்டு எங்களோடு வருவதை ரசித்தோம் இது எங்களை திக்குமுக்காட வைத்தது இங்கு பண்டாக்கள் நம்மை சூழ்ந்து கொண்டு நம் பொறுமையை சோதிப்பது தவிர்க்க முடியாத ஒன்று இது பொறுமையும் நிதானமும் அவசியம் என்பதை உணர்த்துகிறது இங்கு கணவர் மனைவியின் கூந்தலை பின்னி நுனியில் பூவைத்து அந்த முடியை கத்தரித்து யமுனை நதியில் போடுவார்கள் அந்த முடிமேலே மிதக்காமல்90டிகிரி யில் நதியின் அடிபாகம் நோக்கி செல்லும் பிரமிப்பூட்டும் அதிசயம்!!!! வேறு எங்கும் காணமுடியாது இதற்கு வே ணிதானம் என்று பெயர்.

இங்குதான் கங்கை தன் புனித யாத்திரையை தொடங்குகிறாள் எனவே தாமிர சொம்பில் கங்கையை எடுத்துவந்து நம் பூஜை அறையில் வைத்து 
 பூஜிக்க வேண்டும் என்று ஐதீகம்
மூதாதையர்களுக்கு சி ரார்த்தம்செய்தோம். இங்கு நேருவின் ஆனந்த பவனம் இல்லம் உள்ளது அதைச் சென்று பார்த்து ரசித்தோம் பிறகு காசியை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது எப்போதும் போல் நான் ஜன்னலருகே உட்கார்ந்துகண்டு அனைத்து இயற்கை காட்சிகளையும் ரசித்தேன் வழியில் வரு. அசி என்ற இரு நதிகளையும் கடந்தோம் இந்த இரு நதிகளையும் இனண.த்து வாரணாசி என்று பெயர

நீண்ட நாள் ஆசையான காசியை வந்தடைந்தோம். அன்று மாலை தன திரயோதசி யை முன்னிட்டு அன்னபூரணியைபார்க்க சென்றோம்
அன்று தங்க அன்னபூரணி இடம் ரூபாய் காசு வாங்கினாள் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. எனவே அன்னபூரணியை தரிசித்தோம்
11.11 2004 அன்று தீபாவளி விடியற்காலை மூன்று மணிக்கு கங்கைக்குச் சென்று விளக்கேற்றி நீரில் விட்டோம் உண்மையான கங்கா ஸ்நானம் செய்தோம் புதிய ஆடைகளை அணிந்தோம் அனைவரும் இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடினோம்.


அன்று தங்க அன்னபூரணி யையும் லட்டு தேரையும் பலவித பட்டணங்களையும் கண்டு ரசித்தோம் தங்க அன்னபூரணி தீபாவளி மட்டுமே காட்சி தருவாள் மற்ற நேரங்களில ரிசர்வ் வங்கியில் வைத்துவிடுவார்கள் அன்னபூரணியை பார்க்க நாங்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தோம். மாலையில் காலபைரவர் கோவிலுக்கு சென்றோம் சாரநாத் புத்தர் ஆலயம் மிகவும் அழகாக இருந்தது இதை சீனர்கள் பராமரித்து வருகிறார்கள் வியாச காசிக்குச் சென்று காசி ராஜாவின் ஆபரணங்களையும் உபயோகித்த பொருட்களையும் பார்த்து வியந்தோம் உலகப் புகழ்பெற்ற பனாரஸ் யூனிவர்சிட்டி சென்று பார்த்தோம் சோழி அம்மனை பார்த்தால்தான் காசி யாத்திரை முழுமையடையும் என்பது நம்பிக்கை அடுத்த இரண்டு நாட்களும் மூதாதையர்களுக்கு காரியங்கள் செய்ய அசிக்காட்அகல்யா காட் அஸ்வமேத காட் பஞ்சகங்கா காட் மணிகர்ணிகாட் சென்று செய்தோம் காசி பழைய காலம் போல குறுகிய தெருக்களும் சைக்கிள் ரிக்ஷாக்கள் காணப்பட்டது சுமங்கலி பூஜை கங்கா பூஜை செய்துவிட்டு கயா செல்ல ஆயத்தமானோம் முகல்சராய் ஸ்டேஷனிலிருந்து ஜோத்பூர் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸில் கயா வந்தடைந்தோம் அங்கு பல்குனி நதியில் நீராடி மூதாதையர்களுக்கு 64 பிண்டங்கள் வைத்து எங்கள் நன்றிக்கடனை செய்தோம் இங்கு தாயாருக்கு செய்யும் நன்றி கடன் மிகவும் போற்றுதற்குரியது அங்கிருந்து அக்ஷய வடம் சென்று 64 பிண்டங்கள் வைத்து நண்பர்கள் மூதாதையர்கள் நாம் வளர்த்த பிராணிகள் அனைவருக்கும் நன்றி கடன் செலுத்தினோம் அங்கிருந்து ஹவுரா வந்து முக்கியமான காளி கோவில் மற்றும் முக்கிய இடங்களை பார்த்து மகிழ்ந்தோம்

17.11.2004 ஹவுராவிலிருந்து சென்னை செல்லும் ரயிலில் ஏறினோம் எப்போதும் போல் ஜன்னல் அருகே உட்கார்ந்து அனைத்து மக்களுக்கும்Bye
சொல்லி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டேன். காசி பயணம் எவ்வித தடங்கலும் இல்லாமல மகிழ்ச்சியாக முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னோம் சென்னை சென்ட்ரல் ரயில்  நிலையத்தில் எங்கள் பேரக்குழந்தைகளும் பிள்ளையும் வந்து வரவேற்றார்கள் எங்கள் வாழ்நாள் முழுக்கவும் இந்த காசி பயணத்தை மறக்க முடியாது என்பது திண்ணம்!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment