Monday, 1 June 2020

letter

அன்புள்ள பட்டு ( பெயர் மாற்றப்பட்டுள்ளது)
எப்படிடா கண்ணுஇருக்கே? எனக்கு உன்னை பற்றி தான் சதா நினைவு. நீயும் மாப்பிள்ளையும் வீட்டிலிருந்தே வேலை செய்வது அறிந்து சந்தோஷம்!
உனக்கு எப்படி பாட்டி பொழுது போகிறது என்று  நீ கேட்பது 
தெரிகிறது.
எனக்கு என்ன? இரண்டு மாதங்களுக்கு முன் மத்தமர் குரூப்பில் சேர்ந்தது முதல் நேரம் போதவில்லை. நண்பர்கள் எழுதும்பதிவுகளை படிக்கவும் அதற்கு
கமெண்ட்/லைக் எழுதவும் சரியாக இருக்கிறது ஒவ்வொருவருடைய பதிவைப் படிக்கும் போதும் மனதிற்கு உற்சாகம் ஏற்படுகிறது. அதுவும் லாக்டோன் நேரத்தில் மத்திய மர்குரூபஇல்லை என்றால் ரொம்பவே போரடிக்கும். அது சரி உங்களுக்கு வேலை எப்படி இருக்கிறது? உனக்கு டான்ஸ் கிளாஸ் ஆன்லைனில் நடக்கிறதா?
அம்மா அப்பா உன் தங்கை அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள்
உங்களைப் பொறுத்தவரை உங்களுக்கு பல அனுபவங்களை கொரோன சொல்லி கொடுத்திருக்கும்.
கணவன் மனைவியிடையே ஒரு நெருக்கமான அன்னியோன்னியத்தை உண்டாகியிருக்கும் இருவரும் சிரித்துப் பேசி கொண்டு (சில சமயம் சின்ன கோபதாபங்கள்) வேலை செய்வது தனிமையில் பிறருடைய இடையூறு இல்லாமல் இரு வீட்டு குடும்ப விஷயங்கள் உங்களுடைய  சிறு வயது ஞாபகங்களை பேசி மகிழ்வது போன்றவை வாழ்வி ல்ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்ன .நான் சொல்வது சரிதானே.? 
தினமும் எக்சசைஸ் செய் றீங்களா? சைக்கிளிங் வாக்கிங் போனாஇனிஜிம்முக்கு போக வேண்டிய அவசியமில்லை, உடம்பு நல்லா இருக்கும் பணமும் மிச்சம் என்ன சொல்வது சரிதானே

பாட்டி ரொம்ப அட்வைஸ் பண்றேஎன்று நீசொல்வது.  என் காதுல விழுது இருந்தாலும் லெட்டர்ல தான் இதையெல்லாம் கூறமுடியும்
பணமோ சாமான்களோஅவசரத்திறகு
 சேமித்து வைக்கும் பழக்கத்தை இதுசொல்லி கொடுத்திருக்கும், நேரம் அதிகம் இருக்கறதுனால நீங்கள் எல்லோருடனும் பேசி உறவே பலபடுத்துகிறீர்கள் .இதுவரை நினைத்தால் ஹோட்டல் /take away என்று இருந்த நீங்கள் வீட்டிலேயே விதவிதமாக செய்து அசத்துகிறீர்கள் இதெல்லாம் போன்ல சொன்ன போ பாட்டி ரொம்ப ரொம்ப மொக்கை போடுற எனகூறி என்னை பேசவிடாமல் தடுப்பே இது ஒரு நல்ல சந்தர்ப்பம் இதை அமைத்துக் கொடுத்த மதியமர்குரூப்பிற்கு thank s சொல்லணும் சரி சரி எனக்கு நேரம் ஆயிடுச்சு . இதோட லேட்டரை முடிச்சுக்கிறேன். ஏன்னா மத்தியமரில் மற்றவர்கள் எழுதியுள்ளதை பார்க்கரணும். இதுக்கு பதில் எழுது
சொல்ல மறந்துட்டேனே இந்த மாதம் 5.6.2020 வெள்ளிக்கிழமை பெரியவர் ஜெயந்தி அன்று நீ பூஜை செய். மற்றவை
அடுத்த கடிதத்தில்
                               இப்படிக்கு
                                 உன்அன்புள்ள
                                 சியாளா பாட்டி

No comments:

Post a Comment