Friday, 24 July 2020

நேற்று நணபர் ஒருவர் செருப்பு பற்றி
 ஒரு பதிவுவெளியிட்டிருந்தார் அதைப் படித்ததும் எனக்கு 40 வருடத்திற்கு முன் என் நினைவுகள் மனதில் ஒடியதுதமிழ்நாட்டிலிருந்து 1980 ஐந்து ஆசிரியர்களை டெல்லிக்கு தேரதெடுத்து cultural resources training அனுப்பினார்கள் அதில் நானும்ஒருத்தி ஒருமாத ட்ரெய்னிங் அது ,நான் அங்கு கரோல் பாகில் என் தூரத்து உறவினர் வீட்டில் paying guestதங்கினேன். அப்போது ஒரு நாள் அஜ்மல் கான் ரோடு ஒரு கடையில் மிக அழகான செருப்பு ஒன்றைப் பார்த்து வாங்கினேன். அடுத்த நாள் பல கற்பனைகளுடன் அதை போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று நினைத்திருந்தேன் மறுநாள் காலை இந்த செருப்பு கேற்ற புடவை கட்டிக்கொண்டு கிளம்பினேன். அன்று திங்கட்கிழமை பஸ் ஸ்டாண்டில் ஒரே கூட்டம் நான் போகவேண்டிய மண்டி ஹவுஸ் பஸ் வந்தது ஆண் பெண் வித்யாசம் பாராமல் அனைவரும் அடித்துக்கொண்டு ஏறினோம் அப்போது என் செருப்பை ஒருவர் மிதித்துக்கொண்டு ஏற விடாமல் தடுத்தார் நான் சப்பல் சப்பல் என்று கத்தினேன் அவர் அதை காது கொடுத்து கேட்கவில்லை என் செருப்பை மிதித்துக்கொண்டு படியில் ஏறினார் நான் படியில் ஏற என் செருப்பு பஸ்ஸில் இருந்து கீழே விழுந்தது பஸ்ஸும் கிளம்பி விட்டது ஒரு காலில் மட்டும் செருப்பு இருந்தது இறங்கி எடுக்கலாம் என்றாலோபஸ் திரும்பி விட்டது. எனக்கு அழகிய செருப்பு கீழே விழுந்து ஒரு பங்கு அதை மிக ஆசைப்பட்டு வாங்கி வகுப்பில் அனைவரிடம் காட்டவேண்டும் என்று நினைத்தேன் அதிலும் மண் விழுந்தது நினைத்து அழுகை வந்தது ஓரளவு அடக்கிக்கொண்டு என்னுடைய ஸ்டாப் வந்ததும் காலில் இருந்த ஒருசெருப்பை எடுத்து ஆசை தீர பார்த்தேன் அதை என் கர்சீப் பில் எடுத்து சுருட்டிவைத்துக்கொண்டேன். வகுப்பிற்கு சென்று அதை desk அடியில் வைத்தேன், டெல்லி சென்றபோது ஜனவரி மாதம் பயங்கரகுளிர். என் காலில் செருப்பில்லாமல் நடப்பதைப் பார்த்து அனைவரும் ஏன் செருப்பில்லாமல் நடக்கிறாய் என்று கேட்க ஒவ்வொருவருக்கும் என் கதை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது மிகவும் அவமானமாக இருந்தது எப்பொழுது மாலை வரும் வீட்டிற்குச் செல்வோம் என்று நினைத்தேன், மாலை வந்தது அந்தஒற்றைசெருப்பை பத்திரமாக பேப்பரில் சுற்றி எடுத்துக்கொண்டேன், ம்றுநாள் அந்த ஒற்றை செருப்பை எடுத்துக்கொண்டுபோனேன்அடுத்த நாள் பஸ்ஸில் அவ்வளவு கூட்டம் இல்லை உட்காரஇடம் கிடைத்தது. பஸ் புறப்பட்டது உடனே நேற்று எந்த இடத்தில் என் செருப்பு விழுந்ததோ அந்த இடத்தில் என் கையிலிருந்த ஒற்றை செருப்பை வீசி எறிந்தேன்.. பக்கத்திலிருந்த என் சினேகிதி ஏன் செருப்பை தூக்கி போட்டாய்என்று கேட்டாள். நேற்று யாரும் ஒருு செருப்பை எடுத்து இருக்க மாட்டார்கள் இன்று அதன் ஜதையை போட்டால் யாருக்காவது உபயோகமாக இருக்கும் என்று கூறினேன் இதைக்கேட்டு அவள் அதுவும் சரிதான் என்று கூறி சிரித்தாள், இன்றுவரை அதுபோனறசெருப்பு கிடைக்கவில்லை என்பது என் வருத்தத்துக்கு உரியது இதை பதிவு செய்வதால் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்

No comments:

Post a Comment