Tuesday, 5 May 2020

கொறானாகொறானாஎன்று கேட்டுக்கொண்டே இருக்க அதனால கொஞ்சம் மாத்தி யோசிச்சேன் அதனால வந்த வந்தது தான் இது!1967 ஆண்டு எங்களுக்கு திருமணம் ஆயிற்று .எங்கள் இருவருக்கும் ஹனிமூ,ன் போக ஆசை! எனவே என் கணவர் அவர் அப்பாவிடம் நாங்கள் சென்னைக்கு ஹனிமூன் போகலாம் என்று இருக்கிறோம் என்று கூறினார்.என் மாமனார் என்னிடம் வந்து அம்மா… கல்யாண செலவு அதிகமாக ஆனதால் இப்போ நீங்க எங்கேயும் போக வேண்டாம் .நீ சொல்லுமா அவனிடம் என்று கூறினார். எனக்கோ மிக வருத்தம் சொல்ல முடியவில்லை. எங்கள் ஹனி மூன் ஆசை நிறுத்தப்பட்டது.இரண்டு நாள் கழித்து என் மச்சினன் குழந்தைக்கு அதாவது அவருடைய குழந்தைக்கு தலை முழுக்க கட்டி வருகிறது முடி இறக்க வேண்டும் திருப்பதிபோகவேண்டும் என்று கூறினார் உடனே என் மாமனார் நான் போய் குழந்தைக்கு முடிஇறக்கிக் கொண்டு வருகிறேன்.எனறுகூற என் மாமியார் நான் திருப்பதியை பார்த்ததில்லை நானும் வரேன் என்றார். கல்யாணம் ஆனதும் தம்பதியைதிருப்பதி கூட்டிண்டுவரேன்எனறு வேண்டிணடுஇருக்கேன் எனவே இவா ரெண்டு பேரும் வரட்டும் என்று கூறினாள்.பயண ஏற்பாடுகள் ஆரம்பமாயிற்றுஎன் மாமியார் வெளியில் சாப்பிட மாட்டார்கள் மடி சமையல் வேண்டும் எனவே பம்ப் ஸ்டவ்ஒருதகரடின்னில்! சமையல் சாமான்கள். வெங்கலப் பானை சாம்பார் வைக்க என பாத்திரங்கள் ஒரு சாக்குப்பையில் மூட்டை கட்டிட்டினார்கள்.திருவாரூரிலிருந்து திருப்பதி பாஸஞ்சரில் அவர்கள் மூவரும் குழந்தையுடன் வர நானும் என் அம்மாவும் பண்ருட்டியில் டிரெயினில் ஏறினோம். எனக்கும் என் கணவருக்கும் ஒரே குஷி !என்அம்மாஒரு வாரத்திற்கு தேவையான முறுக்கு .சீடை ஸ்வீட் என்று ஒரு டின் நிறைய பட்சணங்கள் செய்து கொண்டு வந்தார் ஆக ஒரு லாரி சாமான எடுத்துடகொண்டுசென்றோம். அது தவிர ட்ரெயினில் சாப்பிட்ட ஒரு கேரியர் நிறைய புளிசாதம் தயிர் சாதம் இட்லி இவைகளை எடுத்துக் கொண்டு போனோம்!கீழ் திருப்பதியில் அவர்கள் மூவரையும் குழந்தையும் பஸ்சில் ஏற்றிவிட்டு நானும் என் கணவரும் மேல் திருப்பதிக்கு நடந்து சென்றோம். அழகான இயற்கை காட்சிகள் தனிமை எங்கள் இருவருக்கும் மிகவும் ஆனந்தமாக இருந்தது. ஒருவழியாக மேல் திருப்பதிக்கு சென்று பஸ் ஸ்டாண்டில் அழைத்துக்கொண்டு நாங்கள் தங்கும் இடத்திற்கு போனோம் இப்போது போல் கூட்டம் கிடையாது தனிவீடு வாங்கிக்கொண்டோம் ஏனென்றால் சமைச்சி சாப்பிட வேண்டுமே!என் மாமியார் சமையல் செய்ய ஆயத்தமானார். ஸ்டவ்வை எடுத்து பத்த வைக்க அதுஎரியவில்லை.அதில்அடைப்பு!அதைநீக்கஸ்டவ் பின் கொண்டுவர மறந்து விட்டார்கள். எங்களிருவரையும் கடைக்குச் சென்ற வாங்கி வரச் சொன்னார்கள். அப்போதெல்லாம் திருப்பதியில் தமிழ் பேசுபவர்களே கிடையாது சுத்ததெலுங்கு! எங்களுக்கு தெலுங்கு தெரியாது.பின் வாங்காமல்ஒரு கட்டு விறகை வாங்கிக்கொண்டு வந்தோம் கற்களை வைத்து அடுப்பு மூட்டி சமையல் ஆரம்பித்தது. பகல் 3 மணிக்கு ஒரு சாதமும் குழம்பும் கிடைத்தது.இப்படியே நான்கு நாட்கள் நாங்கள் இருவரும் கடைக்கு போவதும் வருவதுமாக சந்தோஷமாக கழித்தோம். தினமும் கூட்டம் இல்லாத நேரத்தில் சுவாமி தரிசனம்!ஐந்தாவது நாள் கீழ் திருப்பதி வந்தோம் தாயாரை பார்த்துவிட்டு ஸ்டேஷனுக்கு வந்தோம். இப்போது போல் ரிசர்வேஷன் எல்லாம் கிடையாத கிடைத்த கம்பார்ட்மெண்டில் ஏறிஇடம் பிடிக்க வேண்டும். ஒருவழியாக ரயிலில் ஏறி விட்டோம். அப்போதுதான் சங்கடம் ஆரம்பித்தது!என் மாமியார் டாய்லெட் போய் வர சென்றார் குழந்தையும் கூட சென்றது. ட்ரெயின் கிளம்பி விட்டது அப்போதுதான் பார்த்தோம் குழந்தையை காணவில்லை எங்கள் எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி! ராஜா ராஜா என்று கத்திகொண்டு இங்குமங்கும் ஓடினோம். அதற்குள் டிரெயின் நகர ஆரம்பித்தது...என் மாமியார் ஓ என்று அழ ஆரம்பித்து விட்டாள். பிளாட்பாரத்தில் எட்டிப்பார்த்தால் குழந்தை இல்லை ட்ரெயின்னில் எங்கள் இடத்திலும் குழந்தை இல்லை. ஒருவேளை தண்டவாளத்தில் விழுந்து விட்டதோ என்ற பதற்றம்!! அதற்குள் நான் அடுத்த பகுதிக்குச் சென்று பார்த்தேன் அங்கு ஒரு சண்டை போட்டுக் கொண்டிருந்தகும்பல் நடுவில் குழந்தை அழுது கொண்டு நின்றுகொண்டிருந்தான்.அப்பப்பா! நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!!!ஒரு வழியாக அடுத்த நாள் திருவாரூர்வந்தடைந்தோம்.எங்கள் ஹனி மூன் எப்படி? அதை மாற்றி யோசித்து சந்தோஷமாக ஒரு மலை வாசஸ்தலத்தில் கழித்தோம் என்ற சந்தோஷமும் பெரியவர்களை திருப்திப் படுத்திய சந்தோஷமும் சேர்ந்து எங்களுக்கு மன நிறைவை கொடுத்தது ஹனிமூன் என்ற வார்த்தையை கேட்டால் எங்கள் இருவருக்கும் அந்த நாள் ஞாபகம் வந்து மனநிறைவை கொடுக்கும். இப்பொழுது அதை நான் மட்டுமே தனியாக அனுபவிக்கிறேன்கொடுக்கும்படி

நேற்று மாலை என் பேததிபாட்டி !பாட்டி! என்று கூப்பிட்டுக் கொண்டு வேகமாக வந்தாள் .ஏன் ?என்ன அவசரம் ?என்று கேட்க… பாட்டி எனக்குபசிக்கிறது ….உடனே டிபன் வேணும் என்றாள்.
சரி சரி காத்தால பண்ணிணஇட்லி இருக்கு சாப்பிடு என்று கூறினேன்,
ஐயோ இட்லியா இந்த கொரானா ஊரடங்கில்தினமும் இட்லி தோசை சாப்பி ட்டு போர் (borr)என்று  கூறிக்கொண்டே மாடிக்கு சென்று விட்டாள். என் பிள்ளையும் முணுமுணுத்துக்கொண்டே சென்றுவிட்டான்

நான் உடனே சமையலறைக்குச் சென்று 2 வெங்காயம் 2 தக்காளி ஒரு குடை மிளகாய் எடுத்து பொடிப்பொடியாக நறுக்கினேன். அடுப்பில் வாணலியை போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் கடுகை போட்டு வெடிக்க வைத்தேன். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கினேன். அடுப்பை சிம்மில் வைத்தேன். ஒரு அங்குல நீளத்திற்கு இஞ்சியை எடுத்து தோல் சீவிஅத்துடன் 5 பல் பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழு தாக்கினேன். அதை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி னேன். தக்காளி குடைமிளகாய் இவற்றையும் அத்துடன் போட்டு வதக்கி னேன்.  ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் கரம் மசாலா பொடி உப்பூசேர்த்து நன்கு வதக்கி அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்தேன். மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை போட்டு அதில் எண்ணெய்ஊற்றினேன். எண்ணை சூடாவதற்கு ள் காலையில் பண்ணிய இட்லியைஒரு அங்குல சதுரத்திற்கு  கட் பண்ணினேன். அதை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தேன்...

கீழே இறக்கி வைத்திருந்த கறிகாய் மசாலாவுடன் பொரித்த இட்லியை போட்டு நன்றாக கலந்து வைத்தேன் அத்துடன் கொஞ்சம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி தூவினேன். இதோ கைமா இட்லி தயார் என் பேததியை கீழே இறங்கி வா டிபன் ரெடி !என்றேன் .உடனே என் பிள்ளையும் பேத்தியும் மருமகளும்வேகமாக வந்தார்கள் .என்ன டிபன் என்று கேட்டார்கள் .உடனே நான் ஆளுக்கு ஒரு தட்டில் கைமா இட்லி பரிமாறினேன். அதை பார்த்ததும் இருவருடைய முகமும் பிரசன்னம் ஆயிற்று . ஆஹா!!ச.ரவணபவன் கைமா இட்லி என்று கூறினார்கள் .சாப்பிட்டதும் பாராட்டுகள் அப்பப்பா .மறக்க முடியாத ஒன்று!

கொரானாஊரடங்கு சமயத்தில் பொருளை அதாவது சாப்பாட்டு பொருளை வீணாக்காமல் எப்படி உபயோகப்படுத்துவது என்பதை அவர்களுக்கு இதன்மூலம் உணர்த்தினேன்.

No comments:

Post a Comment