Friday, 7 April 2023

தஞ்சாவூர் ஜில்லாவில் சுமங்கலி பிரார்த்தனை அன்று சமையலில் தனி கூட்டு ஒன்று செய்வார்கள் அது எவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறுகிறேன் மற்ற நாட்களில் அதை செய்ய மாட்டார்கள் தேவையான பொருட்களும் செய்யும் முறையும் கடலைப்பருப்பு கொத்தமல்லி விதை மிளகாய் மூன்றையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும் அதை மிக்ஸியில் பொடி செய்து உருண்டையாக பிடிக்க வேண்டும் அந்த உருளை எந்த அளவு உள்ளதோ அந்த அளவிற்கு புளியை எடுத்து கரைத்துக் கொள்ள வேண்டும் அதே அளவு வெல்லம் எடுத்து கொள்ள வேண்டும் மூன்றையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும் அதில் கடுகு கடலைப்பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்து கொட்டி அல்வா பதம் வரும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும் இதன் ருசி மிகவும் நன்றாக இருக்கும் இதை விரும்பாதவர்களை இருக்க மாட்டார்கள் இந்த தனி கூட்டு சுமங்கலி பிரார்த்தனை அன்று மட்டுமே செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment