Tuesday, 2 May 2023
சமாராதனை சமையல் கல்யாணம் பூனல் போன்ற விசேஷங்களுக்கு முன்பாக அவர்கள் குலதெய்வத்திற்கு சமாரதனை செய்வது வழக்கம் அதற்கு என்று சமையலில் ஒரு வரைமுறை உண்டு ஓரளவு எழுதி இருக்கிறேன் செய்து பயனடையுங்கள் சமாராதனை சமையல்1 சர்க்கரைப் பொங்கல் 2 தயிர் பச்சடி3 பழ பச்சடி4 வாழைக்காய் கறி5 பூசணிக்காய் ரசவாங்கி6 எள்ளு சாதம்7 பிட்டலை8 மோர் குழம்பு9 ரசம் உளுந்த வடை (ஓட்டை போட்டு)
மசால் தோசை தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி மூன்று பங்கு உளுந்து ஒரு பங்குகடலைப்பருப்பு ஒரு பிடி பயத்தம் பருப்பு ஒரு பிடி வெந்தயம் ஒரு ஸ்பூன் அவல் ஒரு பிடி செய்முறை அனைத்தையும் நன்றாக ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து உப்பு போட்டு நன்றாக கரைத்து வைக்க வேண்டும் மறுநாள் எடுத்து தோசை வார்க்க வேண்டும். இதற்கு உருளைக்கிழங்கு வெங்காயம் போட்ட மசாலா அல்லது வெங்காய சாம்பார் சைட் டிஷ் ஆக வைக்க சூப்பரானஹோட்டல் மசால் தோசை ரெடி
Friday, 7 April 2023
தஞ்சாவூர் ஜில்லாவில் சுமங்கலி பிரார்த்தனை அன்று சமையலில் தனி கூட்டு ஒன்று செய்வார்கள் அது எவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறுகிறேன் மற்ற நாட்களில் அதை செய்ய மாட்டார்கள் தேவையான பொருட்களும் செய்யும் முறையும் கடலைப்பருப்பு கொத்தமல்லி விதை மிளகாய் மூன்றையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும் அதை மிக்ஸியில் பொடி செய்து உருண்டையாக பிடிக்க வேண்டும் அந்த உருளை எந்த அளவு உள்ளதோ அந்த அளவிற்கு புளியை எடுத்து கரைத்துக் கொள்ள வேண்டும் அதே அளவு வெல்லம் எடுத்து கொள்ள வேண்டும் மூன்றையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும் அதில் கடுகு கடலைப்பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்து கொட்டி அல்வா பதம் வரும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும் இதன் ருசி மிகவும் நன்றாக இருக்கும் இதை விரும்பாதவர்களை இருக்க மாட்டார்கள் இந்த தனி கூட்டு சுமங்கலி பிரார்த்தனை அன்று மட்டுமே செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கும்பகோணம் கடப்பா கும்பகோணம் என்றாலே கடப்பா நினைவு வருவது சகஜம் இதை விடுவிக்கு சைடிஷ் ஆக கும்பகோணம் இது மிகவும் சத்தான சைட் டிஷ் அதற்கு தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு 100 கிராம் வெங்காயம் உருளைக்கிழங்கு தக்காளி தலா ஒன்று பச்சை மிளகாய் 2 சோம்பு அரை ஸ்பூன் இஞ்சி சிறுதுண்டு பட்டை சிறுதுண்டு பிரிஞ்சி இலை ஒன்றுபூண்டு அஞ்சு பல் கிராம்பு இரண்டு கருவேப்ப கொத்தமல்லி கொஞ்சம் செய்முறை பாசிப்பருப்பு தக்காளி வெங்காயம் உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒன்றாக போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். வேண்டுகிறோம் உருளைக்கிழங்கு நன்றாக மசிக்க வேண்டும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் பிரிஞ்சி இலை இஞ்சி பூண்டு மிளகாய் பட்டை கிராம்பு ஆகியவற்றை தாளித்து அத்துடன் கொத்தமல்லி கருவேப்பிலை போட்டு மசித்து வைத்துள்ள பொருட்களுடன் கொட்ட வேண்டும். அந்தக் கலவையை ஒரு கொதிவரும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும் இப்பொழுது கடப்பா ரெடி இந்த கடப்பா மிகவும் ருசியாகவும் சத்துள்ளதாகவும் அமையும்
Subscribe to:
Comments (Atom)