Wednesday, 5 February 2014

Boodha Kannadi: நவரத்தினங்கள்     தோன்றிய     வரலாறு    (திருவிளைய...

Boodha Kannadi: நவரத்தினங்கள்     தோன்றிய     வரலாறு    (திருவிளைய...: நவரத்தினங்கள்     தோன்றிய     வரலாறு    (திருவிளையாடல்    புராணத்தில்   படித்தது   ) வலன்   என்ற    அசுரன்     சிவனை    பிரார்த்தனை செ...
நவரத்தினங்கள்     தோன்றிய     வரலாறு    (திருவிளையாடல்    புராணத்தில்  

படித்தது   )


வலன்   என்ற    அசுரன்     சிவனை    பிரார்த்தனை செய்தான் .சிவன்   அவன்

பிரார்த்தனையை    ஏற்று    தேவையான   வரத்தை   கேட்க சொன்னார் .

வலன  "நான்    போரில்    பிளவுண்டு    இறவாமல்   இருக்க அருள

வேண்டும் .ஊழ்வினை    காரணமாக    இறக்க   நேரிட்டால்   என்   உடல்

உறுப்புகள் அனைத்தும்     துறவிகளும்    விரும்பும்    வண்ணம்

நவரத்தினமாக     மாறவேண்டும்   "   என   கேட்டு    கொண்டான் .அவ்வாறே

சிவபெருமானும்     வரம்   அளித்தார் .வலன்  இந்திரனுடன்    போர்   செய்து

வெற்றிப் அடைந்தான் .இந்திரன்    வலனை   வெல்வது    என்பது   இயலாத

காரியம்   என்பதை     அறிந்து    அவனை    அழிப்பதற்கு    உபாயம்  

செய்தான்  .இந்திரன்    தான்     செய்யும்    யாகத்திற்கு வேள்வி    பசுவாக

இருக்கும்படி     வேண்டினான்   .அவ்வாறே   வலனும்  பசுவாக   இருந்து

தன்னுடைய    பூத .உடலை    நீத்து     சொர்க்கம்   அடைந்தான் .அவனுடைய

விருப்படியே    வலனுடைய உறுப்புகள் நவரத்தினன்களாக   மாறியது .

உறுப்புகளும்     நவரத்தினமும் .

பசுவின்    ரத்தம் ---------மாணிக்கம்

பற்கள் ------------------------முத்து

முடி ----------------------------வைடுரியம்

எலும்பு -----------------------வைரம்

பித்தம்  -----------------------மரகதம்

வெள்  நிணம் -------------கோமேதகம்

தசை -------------------------பவளம்

விழிகள் --------------------நீலம்

கோழை -------------------புஷ்பராகம்

    .
   .